கோவை தெற்கு தொகுதியில் நியாய விலை கடைகளில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆய்வு!

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம், ராமலிங்கம் காலனி பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.



கோவை: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள நியாயவிலை கடைகளில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். 



கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம், ராமலிங்கம் காலனி பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது, நியாய விலை கடைகளில் இருப்பு வைக்கப்பட்டு இருந்த அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருள்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும், விற்பனை முனைய இயந்திரத்தில் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட பொருள்களின் விவரங்கள், கடைகளில் தற்போது உள்ள இருப்பு குறித்தும் ஆய்வு செய்தார். 



மேலும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இங்கு பொருள்கள் வழங்கப்படுவதை கண்ட அவர் திட்டத்தை கொண்டு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு தனது நன்றியை தெரிவித்தார். 



பாஜக மகளிர் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் ரேஷன் கடையில் ஆய்வு செய்தது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...