சிதம்பரம் கோவில் தீக்‌ஷிதர்களை கைது செய்ய வேண்டும் - தமிழ்நாடு யாதவர் மகா சபை ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

சிதம்பரம் கோயிலில் கடவுளை வழிபடச் சென்ற யாதவ இன முதியவரை தீக்‌ஷிதர்கள் ஆபாச சொற்களால் பேசி கொலை மிரட்டல் விடுத்து அடித்ததாக கூறி அவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு யாதவர் மகா சபை சார்பில் கோவை மாநகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.



கோவை: சிதம்பரம் கோவில் தீக்‌ஷிதர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு யாதவர் மகா சபை சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிதம்பரம் கோயிலில் கடவுளை வழிபடச் சென்ற யாதவ இன முதியவரை தீக்‌ஷிதர்கள் ஆபாச சொற்களால் பேசி கொலை மிரட்டல் விடுத்து அடித்ததாக கூறி அவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு யாதவர் மகா சபை சார்பில் கோவை மாநகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 

அந்த போஸ்டரில் சிதம்பரம் கோயிலில் சாமி கும்பிட வந்த யாதவர் இன முதியவரை ஆபாச சொற்களால் பேசி, கொலை மிரட்டல் விட்டு, அடித்து தாக்கிய தீக்‌ஷிதர்களை உடனே கைது செய்!, நடராஜர் அனைத்து சாதி மக்களுக்குமானவர்!, தீக்‌ஷிதர்களுக்கு மட்டும் சொந்தம் கொண்டாடாதே!!" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த போஸ்டர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஒட்டப்பட்டுள்ளன. 

அண்மையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யக்கூடாது என்று தீக்‌ஷிதர்களால் வைக்கப்பட்ட பதாகையால் சர்ச்சை கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...