சிங்காநல்லூரைச் சேர்ந்த சிறுபான்மையினருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி இந்து மக்கள் கட்சி ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் பகுதியில் வசித்து வரும் சிறுபான்மையின மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி இந்து மக்கள் கட்சியின் மகளிர் அணி சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 



இதுகுறித்து அக்கட்சியின் மகளிர் அணி தலைவி நிர்மலா மாதாஜி, ஆட்சியரிடம் வழங்கியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

சிங்காநல்லூர் பகுதிகளை சேர்ந்த சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சுமார் 60-க்கும் மேற்பட்ட பெண்கள் வீடு இல்லாமல் மிகுந்த சிரமத்தில் தங்களது வாழ்வாதாரத்தினை நடத்தி வருகின்றனர்.

இவர்கள், தங்களது வருமானத்தைக் கொண்டு குடும்பத்தினை நடத்தவே மிகுந்த சிரமத்தில் உள்ளதால் இவர்கள் வசிக்க வீடு ஒன்றினை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும்.

இதுகுறித்து நடவடிக்கை மெற்கொண்டு இவர்களுக்கு வீட்டுமணை பட்டா வழங்கிட ஆவண செய்யுமாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...