பீளமேடு மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்திட அனைத்துக் கட்சி சார்பில் ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், பீளமேடு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு தற்போது வரை முடிக்கப்படாமல் உள்ளது. மேம்பாலப் பணிகள் மெத்தனமாக நடைபெறுவதால் பீளமேடு அனைத்து அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், பொது மக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.

மேலும், கருப்புக் கொடி கட்டுவது, உண்ணாவிரதம், அறப்போராட்டங்கள் உள்ளிட்டவை மேற்கொண்டும் தற்போது வரை அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டதைப் போன்றே உள்ளது.

மேலும், பீளமேடு ரயில் பாதைக்கு முன்புறத்தில் எஸ்ஏஐஎல் என்னும் நிறுவனம் மேம்பாலம் அருகில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் இருந்து இரும்பு தளவாடங்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகளங்கள் தற்போதுள்ள சர்வீஸ் சாலையில் வந்து செல்வதால் சாலை எழிதில் பழுதடைவதுடன் பொதுமக்களுக்கும் பெருமளவில் இடையூறாக உள்ளது.

எனவே, இந்த எஸ்ஏஐஎல் ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா என்னும் நிறுவனத்தை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும். மேலும், உடனடியாக பீளமேடு மேம்பாலப் பணிகளை முடிக்க வேண்டும்' என இன்று அதிமுக, திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், தேமுதிக, பீளமேடு கன்சியூமர் வாய்ஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...