வி.கே.வி குருப்ஸ் சார்பில் 17வது ஆண்டாக ஊராட்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கல்!

நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் படிக்கும் 780 மாணவ மாணவிகளுக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான 5500க்கும் மேற்பட்ட நோட்டு புத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகளை வி.கே.வி குருப்ஸ் சார்பில் நஞ்சுண்டாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் வி.கே.வி.சுந்தரராஜ் வழங்கினார்.



கோவை: நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளியில் படிக்கும் 780 மாணவ மாணவிகளுக்கு விகேவி குழுமம் சார்பில் ரூபாய் 7 லட்சம் மதிப்பில் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

கோவை துடியலூர் அடுத்துள்ள நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு வி.கே.வி. குருப்ஸ் சார்பாக 17-ம் ஆண்டு நோட்டு புத்தகங்கள் மற்றும் புத்தகப்பை வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சிக்குட்பட்ட அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமை தாங்கினர். உதவி தலைமை ஆசிரியர்கள் வரவேற்று பேசினர். ஊராட்சி மன்ற பொறுப்பில் உள்ளவர்கள், ஊர் பெரியவர்கள், பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் முன்னிலை வகித்தனர்.



இதில் சோமையனூர் நடுநிலைப்பள்ளி, உச்சையனூர் தொடக்கப்பள்ளி, நஞ்சுண்டாபுரம் தொடக்கப்பள்ளி, இராமநாதபுரம் தொடக்கப்பள்ளி, வரப்பாளையம் தொடக்கப்பள்ளி, பாப்பநாயக்கன்பாளையம் நடுநிலை பள்ளிகளில் படிக்கும் 780 மாணவ மாணவிகளுக்கு ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 5500க்கும் மேற்பட்ட நோட்டு புத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகளை வி.கே.வி குருப்ஸ் சார்பாக நஞ்சுண்டாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் வி.கே.வி.சுந்தரராஜ் வழங்கினார்.



இந்த நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் ரங்கராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னராஜ், முன்னாள் தலைமை ஆசிரியர்கள் மாணிக்கம், சின்ராஜ், ஊராட்சி துணைத்தலைவர் திருநாவுக்கரசு, கவுன்சிலர்கள் சோமசுந்தரம், குமாரசாமி, நாகராஜ், இந்திராணி, சசிகுமார், ஆறுமுகம், புஷ்பலதா, திவியா, கிருஷ்ணவேணி, ஆனந்தன், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...