வி.கே.வி குருப்ஸ் சார்பில் 17வது ஆண்டாக ஊராட்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கல்!

நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் படிக்கும் 780 மாணவ மாணவிகளுக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான 5500க்கும் மேற்பட்ட நோட்டு புத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகளை வி.கே.வி குருப்ஸ் சார்பில் நஞ்சுண்டாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் வி.கே.வி.சுந்தரராஜ் வழங்கினார்.



கோவை: நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளியில் படிக்கும் 780 மாணவ மாணவிகளுக்கு விகேவி குழுமம் சார்பில் ரூபாய் 7 லட்சம் மதிப்பில் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

கோவை துடியலூர் அடுத்துள்ள நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு வி.கே.வி. குருப்ஸ் சார்பாக 17-ம் ஆண்டு நோட்டு புத்தகங்கள் மற்றும் புத்தகப்பை வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சிக்குட்பட்ட அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமை தாங்கினர். உதவி தலைமை ஆசிரியர்கள் வரவேற்று பேசினர். ஊராட்சி மன்ற பொறுப்பில் உள்ளவர்கள், ஊர் பெரியவர்கள், பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் முன்னிலை வகித்தனர்.



இதில் சோமையனூர் நடுநிலைப்பள்ளி, உச்சையனூர் தொடக்கப்பள்ளி, நஞ்சுண்டாபுரம் தொடக்கப்பள்ளி, இராமநாதபுரம் தொடக்கப்பள்ளி, வரப்பாளையம் தொடக்கப்பள்ளி, பாப்பநாயக்கன்பாளையம் நடுநிலை பள்ளிகளில் படிக்கும் 780 மாணவ மாணவிகளுக்கு ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 5500க்கும் மேற்பட்ட நோட்டு புத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகளை வி.கே.வி குருப்ஸ் சார்பாக நஞ்சுண்டாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் வி.கே.வி.சுந்தரராஜ் வழங்கினார்.



இந்த நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் ரங்கராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னராஜ், முன்னாள் தலைமை ஆசிரியர்கள் மாணிக்கம், சின்ராஜ், ஊராட்சி துணைத்தலைவர் திருநாவுக்கரசு, கவுன்சிலர்கள் சோமசுந்தரம், குமாரசாமி, நாகராஜ், இந்திராணி, சசிகுமார், ஆறுமுகம், புஷ்பலதா, திவியா, கிருஷ்ணவேணி, ஆனந்தன், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...