மத்திய அரசை கண்டித்து கோவையில் தொழிற்சங்கங்கள் சார்பில் திறந்தவெளி மாநாடு!

அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானத்தில் திறந்தவெளி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், LPF, AITUC, HMS, MLF, INTUC உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டன.


கோவை: கோவையில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசை கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் திறந்த வெளி மாநாடு நடைபெற்றது.

நிரந்தரமற்ற தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தி சம வேலைக்கு சம ஊதியம் என்ற சட்டத்தை அமல்படுத்த வேண்டும், கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்களை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும்.



குறைந்தபட்ச மாத ஊதியம் 28 ஆயிரம் என நிர்ணயம் செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் 10,000 வழங்க வேண்டும், வேளாண் விளைபொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய சட்டம் இயற்ற வேண்டும், பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு மீதான கலால் வரியை நீக்கிட வேண்டும்.

மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும், பத்து சதவீதத்திற்கு மேல் தற்காலிக தொழிலாளர்களை நியமிக்க கூடாது, தமிழ்நாட்டில் உள்ள என்.டி.சி ஆலைகள் உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து ஆலைகளையும் உடனடியாக இயக்கி அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டும்.



இவ்வாறான 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் LPF, AITUC, HMS, MLF, INTUC உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் கோவையில் திறந்த வெளி மாநாடுகள் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி இன்று ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானத்தில் முதல் திறந்தவெளி மாநாடு நடைபெற்றது. இதில் எஸ்.எம்.எஸ். மாநில பொதுச் செயலாளர் ராஜாமணி தலைமை வகித்தார்.

மேலும் இந்த மாநாட்டில், LPF தமிழ்செல்வன், AITUC ஆறுமுகம், INTUC சண்முகசுந்தரம், CITU ரத்தினகுமார் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...