இனி மாணவர்களுடன் நமது பயணம்..! - முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு ஃபேஸ்புக் பதிவு!

தமிழக காவல்துறை டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு சமீபத்தில் ஓய்வுபெற்ற நிலையில் அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், காவல் துறை பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். இனி மாணவர்களுடன் நமது பயணம். நீங்கள் ஆக முடியாது என்பது எதுவுமில்லை என பதிவிட்டுள்ளார்.


சென்னை: காவல்துறையிலிருந்து ஓய்வு பெற்ற சைலேந்திரபாபு மாணவர்களுடன் பயணிக்க போவதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு காவல்துறை டிஜிபியாக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்த சைலேந்திர பாபு ஐபிஎஸ் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். பணி ஓய்வு பெறுவதையொட்டி சைலேந்திரபாபுவை நேரில் அழைத்து, அவருக்கு சால்வை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். மேலும், சமூகப் பணிகளை தொடர்ந்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சைலேந்திரபாபு ஒய்வு பெற்றதை தொடர்ந்து, தமிழக காவல்துறையின 32-வது டிஜிபியாக சங்கர் ஜிவால் தேர்வு செய்யப்பட்டு, சமீபத்தில் பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், டிஜிபி பதவியில் இருந்து ஓய்வுபெற்ற சைலேந்திரபாபு டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு, தனது ஃபேஸ்புக் பக்கத்தில், காவல் துறை பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். இனி மாணவர்களுடன் நமது பயணம். நீங்கள் ஆக முடியாது என்பது எதுவுமில்லை; வாங்க முடியாது என்பது ஏதுமில்லை; செய்ய முடியாது என்பதும் ஏதுமில்லை என பதிவிட்டுள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...