திருப்பூரில் குடும்ப தகராறில் மனைவியின் தலையை துண்டித்த கணவன் கைது!

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு அருகே வசித்து வந்த மணிகண்டன் என்பவர் குடும்பத்தகராறில் தனது மனைவி பவித்ராவின் தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் போலீசார் கணவர் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் குடும்பத் தகராறில் மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் கொங்கு மெயின் ரோடு டி.எம்.எஸ் நகரில் உள்ள தனியார் குடியிருப்பில் மூன்றாவது மாடியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருபவர் மணிகண்டன்(37). மதுரையை சேர்ந்த இவர் தனது இரண்டாவது மனைவி பவித்ரா (31) மற்றும் ஒன்றரை வயது மகனுடன் 1 வருடமாக குடியிருந்து வருகிறார்.

அதே பகுதியில் உள்ள கோவிலில் பூவிற்பனை செய்து வரும் இவர் பூசாரியாகவும் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் கணவன் மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.



இதனிடையே இன்று ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரமடைந்த மணிகண்டன் தனது மனைவி பவித்ராவின் தலையை துண்டித்து உடலில் பல இடங்களில் வெட்டி கொலை செய்துள்ளார்.

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சண்டை தொடர்பாக கேட்ட போது தான் கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற திருப்பூர் வடக்கு போலீசார் உடலையும் தலையையும் கைப்பற்றி மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும், இன்று நடந்த சண்டையில் மணிகண்டன் பவித்ராவின் தாயார் குறித்து பேசியதால் ஆத்திரம் அடைந்த பவித்திரா மணிகண்டனை அடித்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் பவித்ராவை 30க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டிக்கொலை செய்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட பிறகு பவித்ராவின் தலையை வெட்டி தனியாக கூடையில் வைத்து எடுத்துச் செல்ல முயற்சித்த நிலையில் இச்சம்பவம் அறிந்த அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மணிகண்டனை கைது செய்து பிரேதத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...