கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மீது திமுக சார்பில் போலீசில் புகார்!

கடந்த 29ஆம் தேதி பாஜக கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள், எம்.எல்.ஏக்கள் பற்றி அவதூறாக பேசியதாக கோவை தெற்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மீது திமுக வழக்கறிஞர்கள் அணியினர் கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.



கோவை: திமுக கவுன்சிலர்கள், எம்.எல்.ஏக்கள் பற்றி அவதூறாக பேசியதாக கோவை தெற்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மீது திமுக சார்பில் ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 29 ஆம் தேதி கோவை வி.கே.கே மேனன் சாலையில் பாஜக சார்பில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேசும்போது, திமுக கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ க்களை பற்றி அவதூறான கருத்துகளை பதிவு செய்ததாகவும், மேலும் திமுக கட்சியை குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது.

வானதி சீனிவாசன் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் திமுக கட்சி மற்றும் மக்கள் பிரதிநிதிகள் குறித்து அவதூறான வகையில் பேசிய வானதி சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக வழக்கறிஞர்கள் அணியினர் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து நாளை கோவை மாவட்டம் முழுவதும் திமுக பகுதி நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...