கோவை அருகே போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் போல நடித்து மளிகை கடையில் ரூ.1.70 லட்சம் பறிப்பு!

கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் எனக்கூறி மளிகைக்கடையில் சோதனை நடத்துவது போல் நடித்து ரூ.1.70 லட்சம் பறித்துக்கொண்டு தப்பிச்சென்ற 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் போல நடித்து ரூ.1.70 லட்சம் பறித்துச்சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை குனியமுத்தூர் அடுத்த இடையர்பாளையம் சர்ச் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(52). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது கடைக்கு காரில் வந்த 3 பேர் பாலகிருஷ்ணனிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் என அறிமுகம் செய்து கொண்டுள்ளனர்.

பின்னர் கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் வந்துள்ளது. எனவே, சோதனை செய்ய வேண்டும் என தெரிவித்து கடைக்குள் சென்று சோதனை செய்தனர். அப்போது கடையில் இருந்து சில ஹான்ஸ் பாக்கெட்டுகளை எடுத்தனர்.

மேலும் கல்லாவில் இருந்த ரூ. 2 லட்சத்தையும் எடுத்து கொண்டு, பாலகிருஷ்ணனிடம் உங்களுக்கு புகையிலை பொருட்கள் சப்ளை செய்வது யார்? என காட்டுங்கள் என கூறி பாலகிருஷ்ணனையும், அவரது மகனையும் தாங்கள் வந்த காரில் ஏற்றி அழைத்து சென்றனர்.

சுந்தராபுரம் காமராஜர் தெரு அருகே சென்ற போது காரை நிறுத்திய 3 பேர் கும்பல்ம் தாங்கள் கடையில் எடுத்த ரூ. 2 லட்சத்தில், ரூ. 30 ஆயிரம் மட்டும் பாலகிருஷ்ணனிடம் கொடுத்து விட்டு, யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி அவர்களை இறக்கி விட்டு சென்றனர்.

அப்போது தான் அவர்கள் மோசடி பேர்வழி என பாலகிருஷ்ணனுக்கு தெரியவந்தது. இதுகுறித்து அவர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...