மாமன்ற கூட்டத்தில் பேச உரிய அங்கீகாரம் வேண்டும் - அதிமுக உறுப்பினர்கள் திருப்பூர் மேயரிடம் கோரிக்கை மனு!

மாமன்ற கூட்டத்தில் பேச உரிய அங்கீகாரம் வழங்க வலியுறுத்தி, திருப்பூரில் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில், அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மேயர் தினேஷ்குமாரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.



திருப்பூர்: மாமன்ற கூட்டத்தில் பேச உரிய அங்கீகாரம் வழங்க வலியுறுத்தி, அதிமுக உறுப்பினர்கள் மேயரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் அதிமுகவைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.



அந்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாநகராட்சியில் விதிக்கப்பட்டுள்ள குப்பை வரி சம்பந்தமான சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும். மாநகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள குப்பை வரி, சொத்து வரி, தண்ணீர் வரி உள்ளிட்டவை குறித்து மேல்முறையீட்டு குழு அமைக்க வேண்டும்.

மேலும், மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்.

இவ்வாறான கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...