கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்கக்கோரி திருப்பூரில் சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் கொரோனா காலத்தின் போது நிறுத்தப்பட்ட நகரப் பேருந்துகளை முறையாக இயக்கிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போக்குவரத்து பணிமனை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூரில் கொரோனா காலத்தின் போது நிறுத்தப்பட்ட பேருந்துகளை முறையாக இயக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் காங்கேயம் சாலை சி டி சி பணிமனை டிப்போ முன்பாக கொரோனா காலத்தின் போது நிறுத்தப்பட்ட பேருந்துகளை முறையாக இயக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா காலத்தின் போது திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் ஏராளமான நகரப் பேருந்துகள் நிறுத்தப்பட்டன, கொரோனா காலத்திற்கு பின்பு இயல்பு நிலை திரும்பி உள்ள இச்சூழ்நிலையில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளன.



இதன் காரணமாக கிராமப்புறங்களில் இருந்து நகர பகுதியில் பள்ளிகளுக்கும் சென்று வரும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைகளுக்கு செல்லும் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.

எனவே நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க வேண்டும், உரிய நிறுத்தங்களில் நின்று செல்ல உத்தரவிட வேண்டும். சனி ஞாயிறு மற்றும் திருவிழா காலங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும், கட்டணமில்லா பயணம் செய்யும் பெண்கள், மாற்று திறனாளிகள், மாணவ மாணவிகளை கண்ணியமாக நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து பணிமனை மேலாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இனியும் பேருந்துகள் இயக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில், மிகப்பெரும் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...