மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்பட்ட அபகரிக்க முயற்சி - ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் தர்ணா!

மாற்றுத்திறனாளிக்காக வழங்கப்பட்ட கடையை திமுக கவுன்சிலர் ஆதரவுடன், திமுக பொறுப்பாளர் கோபால் என்பவர் அபகரிக்க முயற்சிப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளி பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: மாற்றுத்திறனாளிக்காக வழங்கப்பட்ட கடையை திமுக கவுன்சிலர் ஆதரவுடன் அபகரிக்க முயற்சிப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளி பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் புலியகுளம் அருகே உள்ள கிட்னி சென்டர் எதிரே பெட்டிக்கடை நடத்தி வருபவர் ரீனா ரோஸ்லின். மாற்றுத்திறனாளியான இவர், தனது கணவர் சிவகுமாருடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

மாற்றுத்திறனாளி பெண் தர்ணாவில் ஈடுபட்டதை அறிந்த காவல்துறையினர் அவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ரீனா ரோஸ்லின் கூறியதாவது, நான், எனது கடையை வைத்து தான் குடும்பத்தை நடத்தி வருகிறேன். புலியகுளம் கவுன்சிலர் முனியம்மா மற்றும் அவரின் கணவர் பாலமுருகன் பெயரில், திமுக பொறுப்பாளர் கோபால் என்பவர் எனது கடையை தர வற்புறுத்தினார். ஆனால் நான் தர மறுத்துவிட்டேன்.

இந்த சூழலில் மாநகராட்சி அதிகாரிகள் திடீரென கடையை எடுக்க வற்புறுத்தி வருகின்றனர். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவித்து வருகின்றேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை தொடர்ந்து ரீனா ரோஸ்லின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதுதொடர்பாக புகார் மனுவை அளித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென மாற்றுத்திறனாளி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...