பல்லடம் அருகே தனியார் பேருந்து மோதி விபத்து - 4 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் அமரர் ஊர்தி சேதம்!

பல்லடம் அரசு மருத்துவமனை அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அமரர் ஊர்தி மற்றும் அவசர ஆம்புலன்சுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் அமரர் ஊர்தி ஆகியவை சேதமடைந்தன.



திருப்பூர்: பல்லடம் அருகே அரசு மருத்துவமனை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமரர் ஊர்தி மற்றும் தனியார் ஆம்புலன்சுகள் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் அடுத்த திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை முன்பு சாலையோரம் வாடகைக்கு செல்லும் தனியார் ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்திகள் என வாகனங்களை வரிசைப்படுத்தி நிறுத்தி வைப்பது வழக்கம்.

இந்த நிலையில் இன்று கோவையிலிருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த ராஜலட்சுமி என்ற தனியார் பேருந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு பல்லடம் நோக்கி சென்றுள்ளது.



அப்போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அமரர் ஊர்தி மற்றும் அவசர ஆம்புலன்சுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.



இதில் 4 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் அமரர் ஊர்தி ஆகியவை சேதமடைந்தன.

இந்த விபத்தில் பேருந்தில், பயணித்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...