தொண்டாமுத்தூர் அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்த மலைப்பாம்பு - பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விடப்பட்டது!

தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக பிடித்து சென்று அடர் வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.


கோவை: தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் பகுதியில் விவசாய தோட்டத்திற்குள் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராம். இவர் தனது தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை அவர் வழக்கம் போல மண்வெட்டியை எடுக்க வீட்டின் அருகே உள்ள கொட்டகைக்கு சென்றுள்ளார்.



அப்போது அங்கே சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் வனத்துறைக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த கோவை சரக வனத்துறையினர் கொட்டகையில் இருந்த மலைப்பாம்பை பத்திரமாக மீட்டனர்.

இதையடுத்து பிடிபட்ட மலைப்பாம்பை பரிசோதனை செய்து பின்னர் மீண்டும் அடர் வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது கெம்பனூர் பகுதி வனப்பகுதிக்கு அருகே உள்ளதால் அங்கிருந்து, இந்த மலைப்பாம்பு வந்திருக்க கூடும் என தெரிவித்தனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...