திருப்பூரில் உலக அளவிலான இயற்கை சார் உற்பத்திக்கான சாய கண்காட்சி துவக்கம்!

திருப்பூர் அருகே பழங்கரையில் உள்ள ஐ.கே.எப் கண்காட்சி வளாகத்தில் உலக அளவிலான இயற்கை சார் உற்பத்திக்கான சாய கண்காட்சி துவங்கியது. இந்த கண்காட்சியில் 40 அரங்குகளில் இயற்கை சார்ந்த உற்பத்திக்கான சாயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஏராளமான பின்னலாடை உற்பத்தியாளர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.


திருப்பூர்: பழங்கரையில் உள்ள ஐ.கே.எப் கண்காட்சி வளாகத்தில் உலக அளவிலான இயற்கை சார் உற்பத்திக்கான சாய கண்காட்சி துவங்கியது.

திருப்பூர் அருகே பழங்கரையில் உள்ள இந்தியா நிட் பேர் கண்காட்சி வளாகத்தில் டெக்ஸ்டைல் எக்ஸ்டெலன்ஸ் நிப்ட்- டீ கல்லூரி சார்பில் 2-வது உலக அளவிலான இயற்கை சார்ந்த உற்பத்திக்கான சாயம் தொடர்பான கண்காட்சி நேற்று தொடங்கியது.



வருகிற எட்டாம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 40 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் திருப்பூர் பின்னலாடை துறை வளர்ச்சிக்கு தேவையான இயற்கை சாயங்கள், ராணுவ உடைகள் தயாரிப்பதற்கான சாயங்கள், ஆக்டிவ் வியர், விளையாட்டு ஆடைகள் தயாரிப்பதற்கான சாயங்கள், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையிலும், கோடைகாலத்தில் அணியக்கூடிய ஆடைகள் உற்பத்திக்கான சாயங்கள், சுமல் பிரி கார்மெண்ட்ஸ், கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



பின்னலாடை உற்பத்தியாளர்கள் தற்போது பருத்தியினால் ஆன ஆடைகள் தயாரிப்பில் இருந்து தங்களது கவனத்தை சிந்தட்டிக் ரக ஆடைகள் தயாரிப்பில் நகர்ந்துள்ளதால் அதற்கான இயந்திரங்கள் சாயங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய வகையில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.



இந்த கண்காட்சியை ஏராளமான பின்னலாடை உற்பத்தியாளர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

Newsletter

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...