குனியமுத்தூர் அருகே சாலை பள்ளத்தில் சிக்கிய வாகனம் - போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய பெண் உயிரிழந்த சோகம்!

கோவை குனியமுத்தூர் அடுத்த சக்தி நகர் பகுதியை சேர்ந்த நாகம்மாள் என்ற ஓய்வு பெற்ற மின்சார துறை பெண் ஊழியர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்கு செல்லும்போது முன்னால் சென்ற வாகனம் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிக் கொண்ட நிலையில், போக்குவரத்து பாதிப்பால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.


கோவை: குனியமுத்தூர் அருகே சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கிய வாகனத்தால், மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல், ஓய்வு பெற்ற பெண் மின் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை குனியமுத்தூர் சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி என்கிற நாகம்மாள் (70). ஓய்வு பெற்ற மின் ஊழியரான இவர், கணவர் இறந்த நிலையில், தனது மகன் ராஜபாண்டியன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று நாகம்மாள் வீட்டில் இருந்த போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராஜபாண்டியன் தனது காரில் நாகம்மாளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு கிளம்பிச் சென்றார்.

அப்போது சக்திநகர் சாலையில் சென்ற போது அவர்களுக்கு முன்னால் வேன் ஒன்று சென்றது. மழை பெய்து கொண்டிருந்ததால், திடீரென முன்னால் சென்ற வேன் சாலையில் இருந்த குழியில் இறங்கி சிக்கியது.

இதனால் எந்த வாகனமும் செல்ல முடியாததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் அனைவரும் சேர்ந்து நீண்ட நேரம் வேனை சாலை ஓரத்தில் தள்ள முயன்றனர்.

ஆனாலும் முடியாத நிலையில் ஒரு மணி நேரம் கழித்து பொக்லைன் மூலம் வேன் அகற்றப்பட்டு, அவசர அவசரமாக நாகம்மாளை ராஜபாண்டியன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் நாகம்மாள் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் கதறியழுத ராஜபாண்டியன் போலீஸாருக்கு தகவல் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார், நாகம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மோசமான சாலையால் ஓய்வு பெற்ற பெண் மின் ஊழியர் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...