கோவை இருகூர் பேரூராட்சியில் உள்ள மதுபான கடைகளை அகற்ற கோரி மக்கள் நீதி மய்யம் மனு!

கோவை மாவட்டம் இருகூர் பேரூராட்சியில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் செயல்பட்டு வரும் ஆறு மதுபான கடைகளை அங்கிருந்து அகற்றக்கோரி மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.


கோவை: இருகூர் பேரூராட்சியில் பகுதியில் உள்ள 6 மதுபான கடைகளை அகற்ற கோரி மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டம் இருகூரில் உள்ள ஒண்டிப்புதூர் மேம்பாலம், ஏ.ஜி புதூர் சாலை, சின்னியம்பாளையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளில் ஆறு மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதாகவும் மது அருந்தி விட்டு அருகில் உள்ள வீடுகளின் முன் மது பிரியர்கள் படுத்து உறங்குவதுடன் தகாத வார்த்தைகளில் அவர்களை பேசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் அங்கு இருக்கக்கூடிய மதுபான கடைகள் அனைத்தையும் உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...