திருப்பூரில் நியாயவிலை கடையில் தக்காளி விற்பனை செய்யும் திட்டம் - ஆட்சியர் துவக்கி வைப்பு!

தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் நியாய விலை கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.



திருப்பூர்: திருப்பூரில் நியாய விலை கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் எந்த ஆண்டிலும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஜூலை மாத துவக்கத்திலிருந்தே பருவமழை துவங்கிவிட்டது. இதனால், போதுமான காய்கறிகளின் விளைச்சல் இல்லாமல் அனைத்து காய்கறிகளின் விலையும் இரட்டிப்பு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தக்காளியின் விலை கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே ரூபாய் 130 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முதல்வரின் உத்தரவின் பேரில், பொது மக்களின் வசதிக்காக, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நியாய விலை கடைகளின் மூலமாக தக்காளியின் விலை கிலோவுக்கு ரூபாய் 60 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 10 நியாய விலை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.



திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சாலை பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் விற்பனையை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். ஒரு கடையில் ஒரு நபருக்கு 1 கிலோ வீதம் 50 பேருக்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து வரும் நாட்களில் கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...