கோவையில் புதுமண தம்பதிக்கு சின்ன வெங்காயத்தை பரிசளித்த நண்பர்கள்!

கடந்த சில வாரங்களாக சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், கோவையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தம்பதிக்கு, அவர்களது நண்பர்கள் சின்ன வெங்காயத்தை திருமண பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் புதுமண தம்பதிக்கு அவர்களது நண்பர்கள் சின்ன வெங்காயத்தை திருமண பரிசாக வழங்கியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக தக்காளி, சின்னவெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் 200 ரூபாய்க்கும் மேல் விற்பனையாகிறது.

பருவமழை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் பலரும் மீம், மற்றும் காமெடி வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் புதுமண தம்பதிக்கு அவர்களது நண்பர்கள் சின்ன வெங்காயத்தை திருமண பரிசாக அளித்துள்ளனர்.



கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் ஹாலில் கணேஷ் -ஹேமா தம்பதியினரின் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த மணமகனின் நண்பர்கள் சின்ன வெங்காயத்தை அன்பளிப்பாக அளித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Newsletter

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...