கலைஞர் மகளிர் உரிமை திட்ட தன்னார்வலர்கள் பயிற்சி முகாம் - திருப்பூர் ஆட்சியர் திடீர் ஆய்வு!

திருப்பூரில் மகளிர் உரிமை திட்டத்திற்கான தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு, பயனாளிகளை தேர்வு செய்வதற்கான சிறப்பு பயிற்சி முகாமில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பை நேரில் ஆய்வு செய்த ஆட்சியர் கிறிஸ்துராஜ் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.


திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமை திட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாமில், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமை திட்டம் அறிவிக்கப்பட்டு செப்டம்பர் மாதம் முதல் பெண்களுக்கு கிடைக்கும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான பயனாளிகளை தேர்வு செய்வதற்காக இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பங்கு பெற்றுள்ள தன்னார்வலர்கள் மற்றும் பிற தன்னார்வலர்கள் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.



அவர்களுக்கான பயிற்சி கூட்டம் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.



திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 235 நியாய விலைக் கடைகளின் அருகில் நடைபெற உள்ள கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்த சிறப்பு முகாமில் தகுதியுடைய குடும்பத் தலைவிகள் மூலம் வழங்கப்படும் விண்ணப்பங்களை பெற்று சரிபார்க்கப்பட்டு பதிவேற்றம் செய்யும் பணிகளை மேற்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டது.



இந்த பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...