கோவை கற்பகம் பல்கலையில் ‘பூம்பொழில்-2023’ வாழ்வியல் மதிப்புக்கூட்டு உரையரங்கம்!

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலையில் ஜூலை 12, 13 ஆகிய தேதிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான ‘பூம்பொழில்-2023’ வாழ்வியல் மதிப்புக்கூட்டு பயிலரங்க சிறப்புரை நடைபெற்றது. இதில் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றினர்.


கோவை: கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஜூலை 12ஆம் தேதி ‘பூம்பொழில்-2023’ வாழ்வியல் மதிப்புக்கூட்டு பயிலரங்கம் நடைபெற்றது.

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் மொழிகள் துறை - தமிழ் பிரிவின் சார்பில் இளநிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ‘சிந்தனைச் சிறகுகள்’ - வாழ்வியல் மதிப்புக்கூட்டுப் பயிலரங்கத்தின் நான்காம் நாள் சிறப்புரை கடந்த ஜூலை 12 ஆம் தேதி நடைபெற்றது.



நகைச்சுவைப் பட்டிமன்றப் பேச்சாளர் கு.ரா.மஞ்சுநாதன், ‘மகிழ்ச்சி என்னும் மந்திரச்சாவி’ என்கிற பொருண்மையில் சிறப்புரையாற்றினார். சிரிப்புணர்வும், சிந்தனைத்திறனும் மனித இனத்துக்கு இயற்கை அளித்த பெரும் கொடைகளாகும்.

சிந்திக்கத் தெரிந்த பண்புள்ள மனிதர்கள் மட்டுமே பலருக்கும் பயனுள்ளவகையில் வாழ்கிறார்கள். அவர்களின் மகிழ்ச்சியும், நகைச்சுவை உணர்வும் ஒட்டுமொத்த சுற்றுப்புறத்தின் மகிழ்ச்சிக்குக் காரணமாகின்றன. எனவே, அனைவரது உள்ளத்தையும் கொள்ளைகொண்டு, காலம் கடந்தும் அனைவரது நினைவிலும் என்றும் நாம் நிலைத்து வாழ்வதற்கு தன்னலத்தை மறந்த மகிழ்ச்சியே மந்திரச் சாவி என்று கூறினார்.

இதனையடுத்து ஜூலை 13ஆம் தேதி நடைபெற்ற பூம்பொழில் உரையரங்கின் நிறைவுநாளில், கோவை பட்டிமன்ற பேச்சாளர் அமுதகானம் அய்யாசாமி மற்றும் நாட்டுப்புற பாடகர் சமர்பா குமரன் ஆகியோர் இணைந்து, ‘மெல்லிசையும் மண்ணிசையும்’ என்கிற பொருண்மையில் சிறப்புரையாற்றினர்.

மனித வாழ்க்கையும், இசையும் இணை பிரியாத தொடர்புடையவை. மண்ணிசையாகிய நாட்டுப்புற பாடல்கள் மக்களின் பண்பாட்டு பதிவுகளாக விளங்குகின்றன. அவற்றின் வழியாக நமது மண்ணின் பண்பாட்டுத்தடங்களை இளைஞர்கள் தேடிக் கண்டடைவதும் பழங்கால வரலாற்றைச் சான்றுகளுடன் மீட்டெடுக்கிற ஆய்வு முயற்சியாகும்.

கவிஞர் கண்ணதாசனார், பட்டுக்கோட்டையார் முதலாக கவிஞர் வைரமுத்து போன்ற பல கவிஞர்களின் திரையிசைக் கவிதைகளும் காலத்தால் அழியாத காவியங்களாக விளங்குகின்றன என்பதை எடுத்துரைத்தனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...