உடுமலையில் நடைபெற்ற மலைவாழ் மக்களின் காத்திருப்பு போராட்டம் வாபஸ்!

உடுமலை, அமராவதி வனச்சரகத்தில் உள்ள மலைவாழ் மக்கள் தங்கள் பகுதிக்கு சாலை அமைத்து தர வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தையில் சாலை அமைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில் போராட்டம் திரும்ப பெறப்பட்டது.



திருப்பூர்: உடுமலை அருகே சாலை அமைக்க வலியுறுத்தி மலைவாழ் மக்கள் நடத்தி வந்த போராட்டம் திரும்ப பெறப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் குளிப்பட்டி, குருமலை, மாவடப்பு, தளிஞ்சி, கோடந்தூர், காட்டுப்பட்டி உள்ளிட்ட 18 மலைவாழ் கிராமங்கள் உள்ளன.

இங்கு சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கல்வி, சாலை, மருத்துவம், குடிநீர், உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் பல ஆண்டுகளாக தவித்து வருகின்றனர்.

கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்ட முதியவரை, தொட்டில் கட்டி வனப்பகுதியில் இருந்து பல கிலோமீட்டர் தூக்கி வந்து சிகிச்சை பெற்றனர். 2006 வன உரிமைச் சட்டத்தின் படி சாலை வசதி கேட்டு ஏற்கனவே மாவட்ட வன உரிமை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் வனத்துறை சார்பில் தீர்மானத்தில் கையெழுத்திடாததால் திட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்தது.



தற்போதைய அவசர தேவையை கருதி சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி உடுமலையில் அமைந்துள்ள உடுமலை வன சரக அலுவலகத்தின் முன்பாக மலை கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் தங்களது குழந்தைகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வனப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்களுக்கு சாலை, குடிநீர், மருத்துவமனை,பள்ளிக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மட்டும் பல்வேறு நடைமுறைகளை காரணம் காட்டி வனத்துறை அதிகாரிகள் தங்களுக்கு வரும் சலுகைகளை தடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டினர்.

2006 வன உரிமை சட்டத்தில் உள்ளது போல் பழங்குடியின மக்களுக்கு சாலை, குடிநீர், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரும் வரை தொடர்ந்து 3-ம் நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.



இதில் மாநில மலைவாழ் மக்கள் துணைத்தலைவர் சண்முகம் தலைமையில் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த மலைவாழ் மக்கள், தளி பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்தனர்.

பேச்சுவார்த்தையில் தங்கள் கோரிக்கைகளை மக்கள் சார்பாக எடுத்துரைத்த போது பேச்சுவார்த்தை கூட்டம் மாவட்ட வன உரிமை குழு கூட்டமாக மாற்றப்பட்டு சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து தீர்மானம் தயார் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் கையெழுத்திட்டார்.



இதனை தொடர்ந்து கடந்த கூட்டத்தில் கையெழுத்திடாத வனத்துறை சார்பிலும் கையெழுத்திடப்பட்டதை அடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள், மாவட்ட வன உரிமை குழு கூட்ட உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கையெழுத்திட்டதை தொடர்ந்து அரசு விதிகளின்படி சாலை அமைப்பதற்கான அடுத்தகட்ட பணிகள் துவங்கும் என மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் போராட்டக் குழுவினரிடம் உறுதி அளித்தார்.

தங்களது கோரிக்கை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து போராட்டம் திரும்ப பெறப்படுவதாக தெரிவித்தனர். இதன் காரணமாக மூன்று நாட்களாக நடைபெற்று வந்த காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தையில் தங்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றித் தர உடனடி நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியருக்கு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் தளி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...