திருப்பூரில் கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சி - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்!

திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பாக 18வது கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார். வர்த்தகர்கள் - பொறியாளர்கள் இடையே உறவை ஏற்படுத்தக்கூடிய வகையிலான புதிய கைபேசி செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது.



திருப்பூர்: திருப்பூரில் சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சார்பிலான 18வது கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.



திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பாக ஆண்டுதோறும் திருப்பூரில் கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.



ஆண்டுதோறும் கட்டிடங்களுக்கு தேவையான புதுவகை தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வாக இந்த கட்டிட கட்டுமான கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு வரக்கூடிய நிலையில், இந்த ஆண்டுக்கான கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சி தொடங்கியது.



இதனை மாநில செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் ஆகியோர் திறந்து வைத்தனர்.



200க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் செங்கற்களுக்கு மாற்றாக வரப்பட்டுள்ள கற்கள், கட்டிடத்தை இடிக்காமல் நகர்த்தும் மற்றும் உயர்த்தும் தொழில்நுட்பம், புதுவகை பர்னிச்சர்ஸ், புதிய வகை எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



4 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் முதல் நாள் நிகழ்வில் வர்த்தகர்களுக்கும் பொறியாளர்களுக்கும் இடையே உறவை ஏற்படுத்தக்கூடிய வகையிலான புதிய கைபேசி செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...