மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து முதல்வர் வாய் திறக்கவில்லை - பாஜகவினர் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு!

கோவை வி.கே.கே.மேனன் சாலையில் பாஜக மாவட்ட அலுவலகத்தில் பாஜகவினர் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எதிர்க்கட்சி கூட்டத்தில் மேகதாது அணை குறித்து தமிழக முதல்வர் பேசாதது அவரது சுயநலத்தை காட்டுகிறது என பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை: கர்நாடகாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி கூட்டத்தில் மேகதாது அணை குறித்து தமிழக முதலமைச்சர் பேசாதது அவரது சுயநலத்தை வெளிப்படுத்துவதாக பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சியின் தலைவர்கள் கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.



இந்நிலையில் கர்நாடகாவில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து தமிழக முதலமைச்சர் பேசாதத்திற்கு கண்டனங்களை தெரிவித்து கோவை காந்திபுரம் வி.கே.கே.மேனன் ரோட்டில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் மாநகர மாவட்ட உறுப்பினர்கள் மற்றும் விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் உள்ளிட்டோர் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பாஜக மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது,



மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் அமைதியாக உள்ளார். கர்நாடகாவில் நடைபெற்ற கூட்டத்தில் இதை பற்றி பேசாதத்திற்கு கடுமையான கண்டனங்களை பாஜக விவசாய அணி தெரிவிக்கிறது.

கர்நாடக அரசுடன் நட்பு பாராட்டி பேசி கொண்டிருக்கிறார். தமிழகத்தை வஞ்சித்து கொண்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர். தமிழகத்திற்கு திரும்பி வரும் போது தண்ணீருக்கான உரிமை பெற்று வருவார் என காத்திருக்கிறோம்.

ஆனால் அங்கு சமூக நீதிக்காக பேசுவார், தமிழக மக்களுக்காக பேச மாட்டார் என தெரிகிறது. காவிரி தண்ணீரை பற்றி பேசாதது உண்மையான முதலமைச்சரின் சுய ரூபம் பற்றி தெரிகிறது.

ஆனைமலை நல்லாறு, முல்லை பெரியாறு, காவிரி தொடர்பான பிரச்சனை குறித்து பாஜக மாநில தலைவர் நடைபயணத்தில் எதிரொலிக்கும். தமிழக முதலமைச்சர் கட்சி குடும்ப நலனுக்காக கூட்டணியில் உள்ளவர்களை பேசுவதில்லை,

கர்நாடகாவில் காவிரி மேகதாது அணை கட்டுவதற்கான முயற்சி கைவிட வேண்டும், கைவிட்டால் தான் நான் கர்நாடகா வருவேன் என தமிழக முதலமைச்சர் உறுதி அளித்திருந்தால், அதற்கான அறிவிப்பை கர்நாடக அரசு வெளியிட்டிருக்கும். ஆனால் சுயநலத்திற்காக தமிழக முதல்வர் இதனை செய்யவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...