சுந்தராபுரம் அருகே விபத்தில் சிக்கிய காரில் மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல் - பரபரப்பு!

கோவை - பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் கோவை நோக்கி சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த மின் கம்பத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது. விபத்தில் சிக்கிய நபர்கள் தப்பிச்சென்ற நிலையில், காரில் இருந்து மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: சுந்தராபுரம் அருகே விபத்தில் சிக்கிய காரில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



கோவை - பொள்ளாச்சி நெடுஞ்சாலையில், பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த கார் ஒன்று, இன்று காலை 8 மணியளவில் சுந்தராபுரம் அருகே காந்திநகர் பகுதிக்கு வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.



இதையடுத்து காரில் வந்த இருவர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.



அப்போது அவ்வழியாக சென்ற மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த சுந்தராபுரம் போலீசார் காரை திறந்து பார்த்தபோது உள்ளே மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.



இதையடுத்து உள்ளே இருந்த குட்கா பொருட்களை வேறு ஒரு வாகனத்தின் ஏற்றி போலீசார் அங்கிருந்து எடுத்துச் சென்றனர். இதை தொடர்ந்து பொக்லைன் மூலம் விபத்தில் சிக்கிய கார் மீட்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் காரை ஓட்டி வந்த நபர்கள் யார்? எங்கிருந்து குட்கா கடத்திவரப்பட்டது என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...