தாராபுரம் அருகே குப்பையில் கிடந்த காலாவதி மருந்துகள் - பொதுமக்கள் அச்சம்!

தாராபுரத்தை அடுத்துள்ள அலங்கியம் - கொங்கூர் சாலையில், காலை வயலுக்கு சென்ற மக்கள், சாலையோரம் குப்பையோடு குப்பையாக, நூற்றுக்கணக்கான காலாவதியான மாத்திரைகள் மற்றும் மருந்துகள் பயன்படுத்தப்பட்ட ஊசிகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.



திருப்பூர்: தாராபுரம் அருகே காலாவதியான மாத்திரைகள் மற்றும் மருந்துகள், சாலையோரம் கிடந்த சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



தாராபுரத்தை அடுத்துள்ள அலங்கியம் - கொங்கூர் சாலையில், காலை வயலுக்கு சென்ற மக்கள், சாலையோரம் குப்பையோடு குப்பையாக, நூற்றுக்கணக்கான மாத்திரைகள் மற்றும் மருந்துகள் பயன்படுத்தப்பட்ட ஊசிகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.



குப்பையில் கிடந்த மாத்திரைகளில், இது தமிழ்நாடு அரசு வழங்குவது, விற்பனைக்கு அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது.



மக்களின் பயன்பாட்டுக்காக வழங்கிய மாத்திரைகள் மற்றும் மருந்து பொருட்களை மக்களுக்கு தராமல் வைத்திருந்து, காலாவதியான பின் குப்பையில் கொட்டப்பட்டதா, தேவைக்கு போக மீதம் இருந்த மருந்து பொருட்கள் என்றால் உரிய இடத்தில் ஒப்படைக்காதது என் எனவும், இதை செய்தவர்கள் யார் எனவும் கேள்வி எழுந்துள்ளது.

மக்களை சென்றடைய வேண்டிய மருந்து பொருட்கள், குப்பையில் கிடப்பதற்கு யார் பொறுப்பு என்பதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வர்லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...