தாராபுரம் அருகே கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலியான சோகம்!

தாராபுரம் அடுத்த பொம்பநல்லூரில் தங்கியுள்ள ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சந்தமாஜி என்பவரது 3 வயது மகன், பக்கத்து வீட்டு செப்டிக் டேங்க் மீது விளையாடிக் கொண்டிருந்த போது அதன் மூடி உடைந்து உள்ளே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: தாராபுரம் அருகே, விளையாடும் போது கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது வடமாநில சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தமாஜி (36). இவர், தனது குடும்பத்துடன், தாராபுரம் - பழனி சாலையில், பொம்பநல்லூர் பகுதியில் உள்ள (பழனி விஜய்) தனியார் ஸ்பின்னிங் மில்லில் குடியிருப்பில், குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தார்.

சந்தமாஜியின் 3 வயது மகன், பக்கத்து வீட்டு சிறுவனுடன் குடியிருப்பு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த கழிவுநீர் தொட்டியின் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, எதிர்பாராத விதமாக கழிவுநீர் தொட்டியின் மூடி உடைந்து, இருவரும் தொட்டிக்குள் விழுந்தனர். அங்கிருந்த தொழிலாளர்கள், இருவரையும் மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.



அங்கு, சிறுவர்களை பரிசோதனை மருத்துவர்கள், 3 வயது வடமாநில சிறுவன் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். மற்றொரு சிறுவனுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இச்சம்பவம் குறித்து, அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...