கோவையில் உரிமம் இல்லாத மதுபான கடை, மனமகிழ் மன்றத்தை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மனு!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் உரிமம் இல்லாமல் பேருந்து நிறுத்தம் மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அருகில் செயல்பட்டு வரும் மதுபான கடை மற்றும் மனமகிழ் மன்றத்தை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.



கோவை: பெரியநாயக்கன்பாளையத்தில் உரிமம் இல்லாத மதுபான கடை மற்றும் மனமகிழ் மன்றத்தை அகற்ற கோரி மனு அளிக்கப்பட்டு உள்ளது.



மேட்டுப்பாளையம் சாலை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உரிமம் இல்லாத மதுபான கடைகள் மற்றும் மனமகிழ் மன்றத்தை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இது குறித்து அவர்கள் கூறியதாவது, இப்பகுதியில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அருகிலும் உரிமம் வழங்காமல் மதுபான கடை செயல்பட்டு வருகிறது.

இங்குள்ள தனியார் மருத்துவமனை அருகே தனியாருக்கு சொந்தமான மனமகிழ் மன்றம் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் மது அருந்துபவர்களால் அடிக்கடி தகராறுகள் நடைபெறுகின்றன.

மேலும் அப்பகுதியிலேயே உணவகங்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருவதால் அப்பகுதியில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் நடமாட முடியாத சூழல் நிலவி வருகிறது.

எனவே உரிமம் இல்லாமல் செயல்பட்டு வரும் மதுபான கடை மற்றும் மனமகிழ் மன்றத்தை அகற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...