பல்லடம் - தாராபுரம் சாலை விரிவாக்க திட்டத்தில் சாலையோர மின்கம்பங்களை அகற்றாமல் சாக்கடை கால்வாய் அமைப்பதற்கு பொதுமக்கள் கண்டனம்!

பல்லடம் - தாராபுரம் இடையேயான சாலை விரிவாக்க திட்டத்தில் சாலையோரம் உள்ள மின்கம்பங்களை அகற்றாமல் பணிகள் நடைபெற்று வருவதால் பேரிடர் காலங்களில் ஆபத்து நிகழ வாய்ப்புள்ளதாக கூறியுள்ள பொதுமக்கள், மின்கம்பங்களை அகற்றிவிட்டு சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என மாநில நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் - தாராபுரம் சாலை விரிவாக்கத் திட்டத்தில் சாலையோர மின் கம்பங்களை அகற்றிவிட்டு கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாராபுரம் மாநில நெடுஞ்சாலையானது பல்வேறு கட்டங்களாக விரிவாக்கம் செய்யும் பணி பல்வேறு நிறுவனங்களால் ஒப்பந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பல்லடம் - தாராபுரம் சாலை விரிவாக்க பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.



இதனிடையே, சாலையோரங்களில் ஏற்கனவே மின்வாரியத்தால் அமைக்கப்பட்டிருந்த ரோட்டோர மின்கம்பங்களை கவனிக்காமல் சாலை விரிவாக பணியின் போது ரோட்டோரம் மின் கம்பங்களை அப்படியே நடுவில் வைத்து இருபுறமும் கழிவுநீர் சாக்கடை செல்லும் கால்வாயானது அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.



இது குறித்து சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கூறியதாவது, மழை, சூறாவளி காற்று போன்ற பேரிடர் காலங்களில் தற்போது நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணியின் போது சாக்கடை கழிவுநீர் வாய்க்காலின் நடுப்பகுதியில் வைத்துள்ளதால் ரோட்டோர மின்கம்பங்கள் விழுந்து விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு மற்றும் உடைமைகளை இழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனவே உடனடியாக நகராட்சியும், மாநில நெடுஞ்சாலை துறையினரும், மின்சார வாரியமும் இணைந்து போர்க்கால அடிப்படையில் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ள சாக்கடை கால்வாய் நடுவில் உள்ள ரோட்டோர மின்கம்பங்களை அகற்ற வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...