கோவை ஆட்சியர் அலுவலகத்திற்குள் நிலத்தகராறில் இரு தரப்பினர் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு!

கோவையை சேர்ந்த பெண் ஒருவரிடம் நிலத்திற்காக ரூ.50 லட்சம் பணத்தையும் பெற்றுக்கொண்டு நிலத்தை கிரையம் செய்து தராததால், பணத்தை தந்த தரப்பினர் மற்றும் ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்த பெண் தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: நிலத்தகராறு சம்பந்தமாக இரு தரப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே சண்டையிட்டு கொண்டதால் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த ஒரு பெண்ணின் நிலத்தை ஒரு தரப்பினர் கேட்டதாக தெரிகிறது. அதற்கு 50 லட்சம் ரூபாய் விலை பேசிய நிலையில் நிலத்தை வாங்கும் தரப்பினர் 50 லட்சம் ரூபாய் பணத்தை அப்பெண்ணிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அப்பெண் நிலத்தை கிரையம் செய்து தராமல் 50 லட்சம் ரூபாய் பணத்துடன் தலைமறைவானதாக பணத்தை கொடுத்த தரப்பினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இது குறித்து பணத்தை இழந்த தரப்பினர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்தனர்.

தற்போது அந்த சிவில் வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அப்பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தனது இடத்தில் அத்துமீறி சிலர் கட்டிடம் கட்டி வருவதாக புகார் மனு ஒன்றை அளிக்க வந்துள்ளார். இதனையறிந்த பணத்தை கொடுத்த நபர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பெண்ணிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பி உள்ளனர்.

வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாக அப்பெண் கூறிய நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.



வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.



அப்போது அப்பெண்ணின் தரப்பினர் காரில் புறப்பட முயன்ற நிலையில் பணத்தை கொடுத்த தரப்பினர் அவர்களை செல்ல விடாமல் தடுத்து கார் சாவியை பிடுங்கிக் கொண்டனர்.



மேலும் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டனர்.



இதனிடையே அப்பெண் தங்களது சொத்தை அபகரிக்க முயல்வதாகவும் தங்களை தாக்குவதாகவும் கூறி தங்களை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கதறினார். தங்களை தாக்க வந்தவர்கள் யார் என்று தெரியாது எனவும் கூறினார். மேலும் தங்களை கொலை செய்ய பார்ப்பதாகவும் கூறி கதறி அழுதார்.

இதனிடையே 50 லட்சம் ரூபாய் வாங்கியதையும் அப்பெண் ஒப்புகொள்கிறார். ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு செல்வதால் நீதிமன்றம் வாயிலாக பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அப்பெண் கூறுகிறார்.



இவர்களின் இந்த சண்டையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கோவை மாநகர பொருளாதர குற்றப்பிரிவு போலீசார் இருதரப்பினரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மேலும் அப்பெண் வந்த காரையும் காவல் துறையினர் எடுத்துச் சென்றனர்.

Newsletter

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...