வால்பாறை அரசு மருத்துவமனையில் நுழைந்த 5 அடி பாம்பு - பத்திரமாக பிடித்துச் சென்ற தீயணைப்பு துறை!

வால்பாறை அரசு மருத்துவமனையில் புகுந்த ஐந்து அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பை கண்டு நோயாளிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்துச் சென்றனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில் புகுந்த 5 அடி நீள பாம்பை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக பிடித்து சென்றனர்.

வால்பாறையில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் இன்று மதியம் பாம்பு ஒன்று வார்டு பகுதிக்கு வந்ததாக நோயாளிகள் அச்சத்தில் தீயணைப்பு துறைக்கு அழைத்தனர்.



அதைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் மருத்துவமனை வந்து பாம்பை தேடினர் நீண்ட நேரம் தேடிய போது பாம்பு மருந்துகள் வைக்கும் அறை அருகே இருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர்.

பிடிபட்ட பாம்பானது 5 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு என கூறிய தீயணைப்பு துறையினர், மழைக்காலம் என்பதால் பாம்பு அறைக்கு வந்து இருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...