அண்ணாமலையின் யாத்திரை பொய்யான யாத்திரை - முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த்!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ள உள்ள ‘என் மண் என் மக்கள்’ என்ற மக்கள் சந்திப்பு யாத்திரை ஒரு பொய்யான யாத்திரை என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் விமர்சித்துள்ளார்.



கோவை: பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் என்ற யாத்திரை ஒரு பொய்யான யாத்திரை என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் விமர்சித்துள்ளார்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த தனியார் மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாணவர் அமைப்பு சார்பில் தமிழ்நாடு மாணவர் அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள் உடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.



இதில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் கலந்து கொண்டு மாணவர் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.



மாணவர் அமைப்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் விவரித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகாந்த் பேசியதாவது,



மக்களை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் அதற்கு உரிமை உண்டு. ஆனால் அண்ணாமலை மேற்கொள்ள உள்ள யாத்திரையானது ஒரு பொய்யான யாத்திரை அதனால் எந்த பயனும் இருக்காது. அதில் மேற்காட்டுவது அதிகமாக இருக்கும் ஆனால் அதில் எந்தவிதமான பயனும் இருக்காது,

இந்திய வரலாற்றில் முதன்முறையாக பெரிய கூட்டணி ஒன்று உருவாகியுள்ளது. கருத்து உடைய கூட்டு இயக்கமாக செயல்பட உள்ள நிலையில் அது வரவேற்க கூடியதாக இருக்கும். கர்நாடகத்தை போன்று தமிழக அரசியலிலும் சிலிண்டரை வைத்து அரசியல் செய்தது போல தமிழகத்திலும் அரசியல் செய்ய உள்ளோம்.

சிலிண்டர் என்பது பாஜக அரசுக்கு எதிரான சின்னம் அது எல்லா மக்களுக்கும் சாத்தியமாக அமையும். 2024 ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய தேர்தல் என்பது பிஜேபிக்கும் காங்கிரஸ்க்கும் இடையேயான தேர்தல் இல்லை. இது அனைத்து தரப்பு மக்களும் ஒன்றாக நின்று பிஜேபியை எதிர்ப்பதற்கான தேர்தல்.

மணிப்பூர் விவகாரம் மக்களை இரண்டாக பிரித்து நடைபெற கூடிய வன்முறை, மாநில அரசாங்கங்களை அடக்கு முறையால் அடக்கி விடலாம் என்று மத்திய அரசு வைத்துள்ள அனைத்து துறைகளையும் மத்திய அரசுக்கு கீழ் உள்ள அரசாங்கங்களுக்கு எதிராக திருப்பு முயற்சி மத்திய அரசு செய்து வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...