பாஜகவை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் - தபெதிக அறிவிப்பு!

கோவை காந்திபுரம் பகுதியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் பேசிய த.பெ.தி.க பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், மணிப்பூரில் கலவரத்தை உருவாக்கிய பாஜகவை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.


கோவை: மணிப்பூர் கலவரத்தை உருவாக்கிய பாஜகவை கண்டித்து கோவையில் அனைத்து கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளதாக தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.



கோவை காந்திபுரம் பகுதியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் பேசியதாவது,



இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கின்ற பாஜகவும், பிரதமராக இருக்கின்ற மோடியும் தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக தேர்தலை கணக்கிட்டு அமைதியாக இருந்த மணிப்பூரில் இரண்டு இனங்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையே கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

சுதந்திரப் போராட்டத்த்தில் கூட நடக்காத அளவிற்கு இந்த செயல்பாடு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் ஒரு தொகுதி வாக்கு வங்கிற்காக ஏற்பட்ட கலவரம், தற்போது 500க்கும் மேற்பட்ட பாராளுமன்ற தொகுதி பாஜகவிற்கு எதிராக திரும்பி உள்ளது.

மணிப்பூர் கலவர செய்தியை மறைப்பதற்கு தான் தமிழ்நாட்டிலே மத்திய அரசு பல்வேறு திசை திருப்பும் பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக எஸ்டிபிஐ கட்சி அலுவலகம் மற்றும் தலைவர்கள் வீட்டில் சோதனை மேற்கொண்டது. தமிழகத்தில் மீண்டும் ஒரு கலவரத்தை தூண்டும் வகையில் இந்த செயல் நடந்துள்ளது.

இந்த நிலையில் மணிப்பூரில் நடந்த கலவர நிலையை மக்களிடத்தில் கொண்டு செல்லும் வகையிலும், பாஜகவை கண்டித்தும் அனைத்து கட்சியின் சார்பில் தொடர்ந்து போராட்டங்களை நடத்த உள்ளோம், அந்த வகையில் வரும் நான்கு நாட்களில் மனித சங்கிலி போராட்டம் கோவையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...