கோவையில் மகளிர் உரிமை திட்ட 2ஆம் நாள் விண்ணப்ப பதிவு முகாம் - ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு!

கோவை கெம்பட்டி காலனிக்கு உட்பட்ட ஒக்கிலியர் வீதி அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்று வரும் மகளிர் உரிமை திட்ட 2ஆம் நாள் விண்ணப்ப பதிவு முகாமை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.



கோவை: கோவையில் நடைபெற்ற மகளிர் உரிமை திட்ட 2ஆம் நாள் விண்ணப்ப பதிவு முகாமை ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டத்தில் கலைஞரின் மகளிர் உரிமை திட்டத்தின் முதலாம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இதில் தகுதி வாய்ந்த மகளிர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து வருகின்றனர். இத்திட்டத்தில் தகுதி வாய்ந்த மகளிர் யாரும் விடுபட்டு விட கூடாது என முதலமைச்சர் கூறியிருந்தார்.

அதன்படி கோவை மாவட்டத்தில் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்று வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி கெம்பட்டி காலனி ஒக்கிலியர் வீதி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் முகாமை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாரி செல்வன், மண்டல குழு தலைவர் மீனாலோகு ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...