கோவையில் வாய்த்தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை தாக்கிய இருவர் கைது - மேலும் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு!

கோவை அப்பநாயக்கன்பாளையம் அடுத்த கலைஞர் நகர் பகுதியில் பக்கத்து வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஸ்ரீனிவாசன் என்பவரை தாக்கிய கர்ணா மற்றும் கிஷோர் ஆகியோரை துடியலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வல்லரசு மற்றும் லோகோஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.


கோவை: அப்பநாயக்கன்பாளையம் அருகே வாய்த்தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை அப்பநாயக்கன்பாளையத்தை அடுத்த கலைஞர் நகர் பகுதியில் குடியிருந்து வருபவர் ஸ்ரீனிவாசன், ஓட்டுனராக உள்ள இவரது வீட்டருகே குடியிருந்து வருபவர் கர்ணா மற்றும் கிஷோர். இவர்கள் இருவருக்கு ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று வீட்டருகே நின்று கொண்டிருந்த ஸ்ரீனிவாசனிடம் கர்ணா மற்றும் கிஷோர் அவர்களது நண்பர்களான வல்லரசு மற்றும் லோகேஷ் ஆகியோருடன் சேர்ந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அது கைலப்பாக மாறி 4 பேரும் சேர்ந்து ஸ்ரீனிவாசனை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் ஸ்ரீனிவாசனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்ரீனிவாசன் துடியலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கர்ணா மற்றும் கிஷோர் ஆகியோரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வல்லரசு மற்றும் லோகேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...