மணிப்பூர் கலவரம் - கோவையில் திராவிடத் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

மணிப்பூர் கலவரம் மற்றும் பெண்களுக்கு நிகழ்ந்த வன்கொடுமை சம்பவங்கள் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், மணிப்பூர் கலவரம் மற்றும் பாஜக அரசை கண்டித்து கோவையில் திராவிடத் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கோவையில் திராவிடத் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இரு தரப்பினர் இடையே கலவரம் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே மணிப்பூரை சேர்ந்து இரு பெண்களுக்கு நிகழ்ந்த வன்கொடுமை சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மணிப்பூரில் நிலவும் இந்த கலவரத்திற்கு பாஜக அரசு தான் காரணம் என கூறி பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திராவிட தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி மக்கள் மீது தான வன்முறை கலவரக்காரர்களை கண்டித்தும், பெண்கள் மீதான வன்கொடுமையில் ஈடுப்பட்டவர்களை கைது செய்ய கோரியும், மணிப்பூர் பாஜக அரசை கண்டித்தும், ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி, மேற்கு மண்டல தலைவர் கார்த்திக் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...