மணிப்பூர் கலவரம் - கோவையில் பெண் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

மணிப்பூர் கலவரம் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை உள்ளிட்டவை நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கோவை ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் முன்பு பெண் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: மணிப்பூர் கலவரம் மற்றும் பாஜக அரசை கண்டித்து கோவையில் பெண் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இரு தரப்பினர் இடையே கலவரம் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே மணிப்பூரை சேர்ந்து இரு பெண்களுக்கு நிகழ்ந்த வன்கொடுமை சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மணிப்பூரில் நிலவும் இந்த கலவரத்திற்கு பாஜக அரசு தான் காரணம் என கூறி பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.



அதன் தொடர்ச்சியாக கோவையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் முன்பு அனைத்துப் பெண் வழக்கறிஞர்களும் இணைந்து மணிப்பூர், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கண்டன பதாகைகளை ஏந்தி, கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



மேலும் இதில் பெண்கள் பாதுகாப்பையும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...