உடுமலையில் சாதனை மாணவிகளுக்குப் பாராட்டு விழா!

உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் அரசு விருந்தினராக பங்கேற்ற மாணவி உமா நந்தினி மற்றும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் 2ஆம் இடம் பிடித்த வி.ப்ரீத்தி ஆகியோரை பாராட்டி, ரூ.10000 ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.



திருப்பூர்: உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் தேசிய அளவில் சாதனை புரிந்த மாணவிகளை பாராட்டி, ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் தேசிய அளவில் சாதனை புரிந்த மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா கல்லூரியின் கூட்ட அரங்கில் நடைபெற்றது.



டெல்லி புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவில் அரசு விருந்தினராக பங்கேற்ற மூன்றாமாண்டு தமிழ் இலக்கியம் பயிலும் மாணவி உமா நந்தினி, மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்த வி.ப்ரீத்தி ஆகிய இருவருக்கும் பாராட்டு விழா நடத்தப்பட்டு விருதுத் தொகை தலா ரூபாய் 10000 ஆயிரம் மற்றும் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரின் செயலர் ஸ்ரீமதி சுமதி கிருஷ்ணப் பிரசாத் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக கமாண்டிங் அதிகாரி ஜே.எம்.ஜோஷி, மேஜர் ஸ்ரீ பிரியா மற்றும் துணை மேஜர் நஸிப் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல்வர் முனைவர் ந. ராஜேஸ்வரி வரவேற்புரை வழங்கினார்.



ஆலோசகர் முனைவர் ஜெ. மஞ்சுளா அவர்கள் பாராட்டு உரை நிகழ்த்தினார். கல்லூரிப் பேரவையின் ஒருங்கிணைப்பாளரும், இயற்பியல் துறைத் தலைவருமான முனைவர் எஸ். அறம் நன்றியுரை வழங்கினார். கல்லூரி தேசிய மாணவர் படை அதிகாரி கற்பகவல்லி உடன் இருந்தார்.

நிறைவாக தேசியப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது. சாதனை மாணவிகளை கல்லூரி நிர்வாகத்தினர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் சக மாணவிகள் பாராட்டி தங்கள் மகிழ்வைத் தெரிவித்துக் கொண்டனர்.



Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...