பன்னிமடை அருகே மின்வேலிகளை உடைத்து தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை - பொதுமக்கள் அச்சம்!

கோவை பன்னிமடையில் இருந்து வரப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ஆனந்தகுமார் என்பவரது தோட்டத்திற்குள் நேற்றிரவு புகுந்த காட்டு யானை மின் வேலிகளை உடைத்து 10க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்திவிட்டு சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: பன்னிமடை அருகே மின்வேலிகளை உடைத்து தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானை தென்னை மரங்களை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஆனைகட்டி மலைப் பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவைகள் உணவு தேடி மலை அடிவாரப் பகுதிகளான மாங்கரை, தடாகம், வரப்பாளையம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.



இந்த நிலையில் நேற்று இரவு பன்னிமடையில் இருந்து வரப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ஆனந்தகுமார் என்பவரது தோட்டத்தில் காட்டு யானை ஒன்று புகுந்துள்ளது.



அந்த யானை தோட்டத்தின் மின் வேலிகளை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றுள்ளது.



இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...