உடுமலையில் ஆசிய ஹாக்கி கோப்பை அறிமுகம் - அமைச்சர்கள் பங்கேற்பு!

உடுமலை அரசு ஆண்கள் பள்ளியில் நடைபெற்ற 7வது ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி கோப்பை மற்றும் லோகோ அறிமுக விழாவில், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் கலந்து கொண்டனர்.



திருப்பூர்: உடுமலை அரசு ஆண்கள் பள்ளியில் 7வது ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி கோப்பை மற்றும் லோகோ அறிமுக விழா நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை கல்பனா ரோட்டில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான நேதாஜி விளையாட்டு மைதானத்தில் ஏழாவது ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி கோப்பை அறிமுக விழா மற்றும் ஏழாவது ஆசிய ஹாக்கி போட்டியின் லோகோ அறிமுகம் செய்யப்பட்டது.



பின்னர் ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. முன்னதாக அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளி மாணவர் மாணவர்களின் சீர்மிகு அணிவகுப்பு செய்து காண்பிக்கபட்டது.



இந்த நிகழ்வில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி, மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஸ்துராஜ், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் லட்சுமணன், திருப்பூர் மாநகராட்சி 4ஆம் மண்டல தலைவர் இலா.பத்மநாபன் மற்றும் திருப்பூர் மாவட்ட்ட விளையாட்டு துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...