மசினகுடியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சிறுத்தை - பரபரப்பு!

மசினகுடி - ஊட்டி சாலையில் உள்ள வாழைத்தோட்டம் பிரிவில் 6 வயதுடைய சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த நிலையில், வனத்துறையினர் கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் உடற்கூராய்வு செய்து இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


நீலகிரி: மசினகுடி அருகே 6 வயது மதிக்கத்தக்க சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு உள்ள மசினகுடி கோட்டத்தில் வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிங்காரா வனச்சரகத்திற்குட்பட்ட மசினகுடி - ஊட்டி சாலை ரோட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனையடுத்து வனத்துறையினர் வாழைத்தோட்டம் பிரிவில் சென்று பார்த்தனர். அப்போது அங்கு உள்ள ஒரு பகுதியில் 6 வயதுடைய பெண் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்தது. இதுதொடர்பாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் மூலம் சிறுத்தையை பிரேத பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்றது.

பிரேத பரிசோதனையின் முடிவில் தான் அந்த சிறுத்தை எப்படி இறந்தது என்பது பற்றிய விவரங்கள் தெரியவரும். இருந்தபோதிலும் அது சக விலங்கு தாக்கியதால் படு காயம் அடைந்து இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...