கோவை வடக்கு தொகுதியில் அடிப்படை வசதிகள் கோரி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் மனு!

கோவை வடகிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 18, 31, 32, 40, 42, 43, 44, 46ஆம் வார்டுகளில் அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு வசதிகளை செய்து தரவேண்டும் என வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப்பிடம் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் மனு அளித்துள்ளார்.


கோவை: கோவை வடக்கு தொகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி மாநகராட்சி ஆணையரிடம் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் மனு அளித்துள்ளார்.

கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனன் கட்சி நிர்வாகிகளுடன் மாநகராட்சி அலுவலகத்துக்கு வருகை தந்தார். அங்கு மாநகராட்சி ஆணையர் பிரதாப்பிடம் கோரிக்கை மனுவை வழங்கினார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கோவை மாநகராட்சி 29வது வார்டு மோர் மார்க்கெட் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. 30ம் வார்டு மணியக்காரம்பாளையம் செல்லும் பாதையில் உள்ள பாரதியார் ரோடு, அண்ணாநகர், ஸ்ரீதேவி நகர், மூகாம்பிகை நகர் மற்றும் பெரியார் நகரச்சாலைகளில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

கணபதி கஸ்தூரிபாய் வீதியில் உள்ள பழுதான சாலைகளை சீரமைத்து தர வேண்டும். மாமரத்தோட்டம், மணல் தோட்டம் பகுதிகளில் உள்ள பூங்காவுக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். சங்கனூர் பாலத்தின் அடியில் உள்ள ஓடையை தூர்வார வேண்டும்.

20வது வார்டில் பாரதி நகர் முதல் வ.உ.சி நகர் வரை குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். இதுதவிர 18, 31, 32, 40, 42, 43, 44, 46ஆம் வார்டுகளில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...