கோவையில் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர் தேர்தல் - மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்றது!

மாநில தேர்தல்‌ ஆணையத்தின்‌ உத்தரவின்படி, கோவை‌ மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களுக்கான மறைமுகத்‌ தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு‌ மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.


கோவை: கோவை மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர் தேர்தலில் 9 பேர் வெற்றி பெற்றனர்.

தமிழ்நாடு மாநில தேர்தல்‌ ஆணையத்தின்‌ உத்தரவின்படி, கோவை‌ மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களுக்கான மறைமுகத்‌ தேர்தல்‌ இன்று காலை 9.30 மணிக்கு மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ உள்ள விக்டோரியா ஹால்‌ மாமன்ற‌ கூடத்தில்‌ மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ தலைமையில்‌ நடைபெற்றது.

இந்த மறைமுக தேர்தலில்‌ வார்டு எண்‌.7, 9, 17, 38, 39, 43, 44, 47, 48, 56, 74, 75, 78, 85, 86, 90, 91, 95, 96, 97, 98 மற்றும்‌ 99 ஆகிய 22 மாமன்ற உறுப்பினர்கள்‌ தவிர 78 மாமன்ற உறுப்பினர்கள்‌ வருகை புரிந்தனர்‌. வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள்‌ பதவிக்கு 10 மாமன்ற உறுப்பினர்கள்‌ வேட்பு மனு தாக்கல்‌ செய்தனர்‌.

வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள்‌ பதவிக்கு போட்டியிட்ட 10 வேட்பாளர்களில்‌

வார்டு எண் 1 - ஆர்.கற்பகம்

வார்டு எண் 37 - குமுதம்

வார்டு எண் 69 - சரவணக்குமார்

வார்டு எண் 41 - கே.சாந்தி

வார்டு எண் 83 - வி.சுமா

வார்டு எண் 58 - சுமித்ரா

வார்டு எண் 45 - பேபிசுதா

வார்டு எண் 6 - பொன்னுசாமி

வார்டு எண் 76 - ராஜ்குமார்

ஆகிய 9 வேட்பாளர்கள்‌ அதிக வாக்குகள்‌ பெற்று வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர்‌.



எனவே, வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில்‌ அதிக வாக்குகள்‌ பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு மாநகராட்சி தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர் சான்றிதழ்களை வழங்கினார்‌.



இந்நிகழ்வில் மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ அவர்கள்‌, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன்‌ அவர்கள்‌, மண்டல குழு தலைவர்கள்‌, மாமன்ற உறுப்பின்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...