பன்னிமடை அருகே வாழை தோட்டத்தை சேதப்படுத்திய காட்டு யானை - பரபரப்பு!

பன்னிமடை அடுத்த பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள நரசிம்மராஜ் என்பவரது வாழைத்தோட்டத்தில் நேற்றிரவு புகுந்த ஒற்றை காட்டு யானை 100க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தி விட்டு சென்றது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: பன்னிமடை அருகே ஒற்றை காட்டு யானை வாழைத் தோட்டத்தில் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஆனைகட்டி மலைப் பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவைகள் உணவு தேடி மலை அடிவார பகுதிகளான மாங்கரை, தடாகம், வரப்பாளையம், பாப்பநாயக்கன்பாளையம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.



இந்த நிலையில் நேற்றிரவு பன்னிமடை அடுத்த பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள நரசிம்மராஜ் என்பவரது வாழை தோட்டத்தில் ஒற்றைக் காட்டு யானை ஒன்று புகுந்துள்ளது.



அந்த தோட்டத்தின் உள்ளே சென்ற யானை, அங்கிருந்த 100க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...