தாராபுரம் அருகே அரிசி ஆலையில் இரும்பு கம்பிகளை திருடிய வாலிபர் கைது!

தாராபுரம் - பழனி சாலையில் செயல்பட்டு வரும் அரிசி ஆலையில் வைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகளை திருடிச்சென்ற தாராபுரம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த தில்லைமுத்து (23) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 30 கிலோ இரும்பு கம்பிகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவரது கூட்டாளிகள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே வரும் அரிசி ஆலையில் வைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகளை திருடிச்சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தாராபுரம் - பழனி சாலையில் செயல்பட்டு வரும் அரிசி ஆலையில் வைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகள் சமீபத்தில் திருட்டு போனது. இது குறித்து அரிசி ஆலையின் மேலாளர் செந்தில்நாதன் தாராபுரம் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தாராபுரம் உதவி காவல் ஆய்வாளர் கருப்புசாமி தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தாராபுரம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த தில்லைமுத்து (23) மற்றும் இவரது கூட்டாளிகளான தீனா (23), கவுதம் (23) ஆகிய 3 பேர் இரும்பு கம்பிகளை திருடியது தெரியவந்தது.



இதில் தில்லைமுத்து மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இவரிடமிருந்து 30 கிலோ இரும்பு கம்பிகளை பறிமுதல் செய்தனர். மேலும் இவரது கூட்டாளிகளான கவுதம் மற்றும் தீனா ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...