தாராபுரம் அருகே அரிசி ஆலையில் இரும்பு கம்பிகளை திருடிய வாலிபர் கைது!

தாராபுரம் - பழனி சாலையில் செயல்பட்டு வரும் அரிசி ஆலையில் வைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகளை திருடிச்சென்ற தாராபுரம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த தில்லைமுத்து (23) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 30 கிலோ இரும்பு கம்பிகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவரது கூட்டாளிகள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே வரும் அரிசி ஆலையில் வைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகளை திருடிச்சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தாராபுரம் - பழனி சாலையில் செயல்பட்டு வரும் அரிசி ஆலையில் வைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகள் சமீபத்தில் திருட்டு போனது. இது குறித்து அரிசி ஆலையின் மேலாளர் செந்தில்நாதன் தாராபுரம் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தாராபுரம் உதவி காவல் ஆய்வாளர் கருப்புசாமி தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தாராபுரம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த தில்லைமுத்து (23) மற்றும் இவரது கூட்டாளிகளான தீனா (23), கவுதம் (23) ஆகிய 3 பேர் இரும்பு கம்பிகளை திருடியது தெரியவந்தது.



இதில் தில்லைமுத்து மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இவரிடமிருந்து 30 கிலோ இரும்பு கம்பிகளை பறிமுதல் செய்தனர். மேலும் இவரது கூட்டாளிகளான கவுதம் மற்றும் தீனா ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...