நமக்கு நாமே திட்ட பணிகள் குறித்து தொழில் வளர்ச்சி நிறுவன மேலாண்மை இயக்குனர் ஆய்வு!

கோவை மாவட்டத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண் இயக்குனருமான ஜெயஸ்ரீ முரளிதரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவையில் நமக்கு நாமே திட்ட பணிகளை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.



கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகளை மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண் இயக்குனருமான ஜெயஸ்ரீ முரளிதரன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதன்படி, மதுக்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் கட்டப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அதனைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 24 வது வார்டுக்கு உட்பட்ட டைட்டில் பார்க் சாலையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மழை நீர் வடிகால், புதிய தார்சாலை அமைத்தல், சாலை தடுப்பு அபிவிருத்தி பணிகள் செய்தல் மற்றும் நடைபாதை தளங்களுக்கான அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளுதல் மற்றும் புதிதாக தொடங்கி வைக்கப்பட்ட திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின் போது கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகராட்சி மேயர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...