கோவையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தள்ளுவண்டி கடை - அகற்றக்கோரி ஆட்சியரிடம் மக்கள் புகார் மனு!

மணியகாரம்பாளையம் பகுதியில் பொதுக்கழிப்பிடம் அருகே ரங்கநாதன் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து தள்ளுவண்டி உணவு கடை நடத்தி வருவதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி, கடையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.


கோவை: மணியக்காரம்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தள்ளு வண்டிக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.



கோவை மணியக்காரன்பாளையம் பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே அதே பகுதியை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் தள்ளுவண்டியில் வைத்திருந்த உணவகத்தை, கோவை மேயரின் கணவர் ஆனந்தகுமார் உத்தரவிரன் பேரில் அகற்றியதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதில் ரங்கநாதன் என்பவர் பொதுமக்கள் பயன்படுத்தும் பொது கழிப்பிடம் அருகே ஆக்கிரமிப்பு செய்து தள்ளுவண்டி கடை நடத்தி வருவதாக கூறியுள்ளனர்.

மேலும், இரவு நேரங்களில் அங்கு கடை நடத்தாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக செயல்பட்டு வருவதாகவும், இதனால் கழிப்பிடத்தை பயன்படுத்தும் பெண்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, வடக்கு மண்டல தலைவரிடம் புகார் அடிப்படையில் தள்ளு வண்டியை பறிமுதல் செய்ததாகவும், ஆனால் மேயர் மற்றும் மேயரின் கணவர் மீது தவறான செய்திகளை பரப்பி வருவதாக தெரிவித்தனர். மேலும் ரங்கநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...