நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமான தொழிற்சாலையில் இருந்து நச்சு புகை வெளியேற்றம் - பொதுமக்கள் முற்றுகை போராட்டம்!

பல்லடம் அடுத்த 63.வேலம்பாளையம் அருகேயுள்ள வி.ஆர்.பி நகரில் செயல்பட்டு வரும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமான தார் தொழிற்சாலையில் இருந்து நச்சுப்புகை வெளியறுவதாக கூறி பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: பல்லடம் அருகே நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமான தார் தொழிற்சாலையில் இருந்து நச்சுப்புகை வெளியறுவதாக கூறி பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



பல்லடம் அடுத்த 63.வேலம்பாளையம் அருகேயுள்ள வி.ஆர்.பி நகரில் தனியாருக்கு சொந்தமான தார் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.



இந்த தார் தயாரிக்கும் தொழில்சாலையில் இருந்து நச்சுப்புகை வெளியேறுவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அருகில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு சுவாசக்கோளாறு மற்றும் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் தொடர்ச்சியாக புகார் மனு அளித்துள்ளனர்.



இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் தார் தயாரிக்கும் தொழிற்சாலை முன்பு தரையில் அமர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்நிலையில் இந்த தார் தயாரிக்கும் தொழிற்சாலை நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமானது என்கிற அதிர்ச்சி தகவலையும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, தற்போது வெளியாகியிருக்கும் மாவீரன் திரைப்படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் பேசும் வசனங்கள் வெறும் நடிப்பிற்காக தானா? என கேள்வி எழுப்பினர்.

நச்சு புகையை வெளியேற்றும் தார் தொழிற்சாலை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...